21 October 2016

ஜாதகம் பொருத்தம் ஏன் பார்க்க வேண்டும்

ஜாதகம் பொருத்தம் ஏன் பார்க்க வேண்டும் ?


ஜாதக பொருத்தம் என்பது பல காலமாக  நமது முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வரும் அதி நம்பிக்கையான பழக்கம் ஆகும். இன்று கம்ப்யுட்டர் யுகமாக இருந்தாலும் இந்த நம்பிக்கை இன்றும் உள்ளது . மனிதனின் பிறப்பு ஜாதகம் அவனது குண நலன்களை கூறுகிறது. கண்ணுக்கு தெரியாத எங்கோ இருக்க கூடிய கிரகங்கள் மனிதனை இயக்குகிறது. அதன் படி மனிதன் இயங்குகிறான். ஜாதகத்தை பார்த்தது கூடுமானவரை ஒருவரை கணிக்க இயலும் . எனவே திருமணத்திற்கு முன் ஜாதகம் பார்ப்பது மிக அவசியமான ஒன்றாக உள்ளது . ஜாதகத்தில் குணநலன் ,உடல் அமைப்பு ,வேலை ,வசதி ,வாய்ப்புகள் ,ஆயுள் ,நோய் ,உடல் ஆரோக்கியம் ,அத்தனையும் ஓரளவு கணிக்க இயலும் . எனவே இன்றும் ஜாதகம் மக்கள் பார்க்கின்றனர் . 

 ஜாதகத்தில் பொருத்தம் இருந்தால்தான் அடுத்த கட்டம் செல்கின்ற்றனர். திருமணம் என்று பேச்சு ஆரம்பித்த உடனே பொருத்தம் மிக முக்கியமாக உள்ளது . அதிக பட்ச பொருத்த்த்தம் இருப்பது மிகவும் விரும்ப படுகிறது . ஐந்துக்கு கீழ் உள்ள பொருத்தம் அதமம் என்றும் , எட்டுக்கு கீழ் உள்ளது மத்திமம் என்றும் ஒன்பது  அல்லது அதற்கு மேல் உள்ளது உத்தமம் என்று கூறப்படுகிறது.  மொத்தம் பத்து  பொருத்தம் உள்ளது  அதனை காண்போம். 

  1. தினப்பொருத்தம் 
  2. குணம் பொருத்தம் 
  3. மகேந்திரம் பொருத்தம் 
  4. ஸ்திரி பொருத்தம் 
  5. யோனி பொருத்தம் 
  6. ராசி பொருத்தம் 
  7. ராசியாதிபதி பொருத்தம் 
  8. வசியம் பொருத்தம் 
  9. ஜ்ஜு பொருத்தம் 
  10. வேதை  பொருத்தம் 

ஆகும். பொருத்தத்தில் மிக முக்கிமானது மன பொருத்தமே ,மனப்பொருத்தம் இருப்பின் மற்ற பொருத்தத்தை பற்றி கவலை இல்லை. உங்கள் முயற்சி பலன் அளிக்கட்டும்



கோவி . வெங்கடேசன் 
ஜோதிட ஆராய்ச்சியாளர் 
மதுரை - 1

எங்களை அழைக்க 9940676964 , 9364442500


No comments:

Post a Comment